Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Wednesday, June 23, 2010

கனவு காணும் வாழ்க்கை

நான் அதிகம் பேசப்போவதில்லை பாலுமகேந்திரா, இளையராஜா, தாய் இறப்பு, சோகம் வேறொன்றுமில்லை.


படம்: நீங்கள் கேட்டவை
பாடியவர்: யேசுதாஸ்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரமென்று கரையைத் தேடும் ஓடங்கள்


பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய்தானே
ஆசைகளென்ன? ஆணவம் என்ன?
உருவங்கள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பைதானே

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரமென்று கரையைத் தேடும் ஓடங்கள்


காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்?
பேதை மனிதனே!
கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்!

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரமென்று கரையைத் தேடும் ஓடங்கள்

Sunday, March 7, 2010

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ

பாரதி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களுமே சிறப்புக் கவனத்துடன் இசையமைக்கப்பட்ட பாடல்களென கூறலாம். எனக்கு திரு. ஜேசுதாஸ் அவர்களின் குரம் மிகவும் பிடிக்கும். அவருடைய குரலையொத்த திரு. மது பாலகிருஷ்ணனின் குரலும் பிடிப்பதில் ஆச்சர்யமில்லை. இந்த பாடலை அவர் இழைந்து பாடியிருப்பது எப்பொழுது கேட்டாலும் ஒருவித பரவச நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

வரிப்புலி அதள் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பென்னும் திமி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தரத்தகும் நெறி
வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் எனத்தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு தொண்டன்
பற்று தளைக்கு நெருப்பவன் ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக் கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன்

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ