நான் அதிகம் பேசப்போவதில்லை பாலுமகேந்திரா, இளையராஜா, தாய் இறப்பு, சோகம் வேறொன்றுமில்லை.
படம்: நீங்கள் கேட்டவை
பாடியவர்: யேசுதாஸ்
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரமென்று கரையைத் தேடும் ஓடங்கள்
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய்தானே
ஆசைகளென்ன? ஆணவம் என்ன?
உருவங்கள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பைதானே
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரமென்று கரையைத் தேடும் ஓடங்கள்
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்?
பேதை மனிதனே!
கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்!
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரமென்று கரையைத் தேடும் ஓடங்கள்
Wednesday, June 23, 2010
கனவு காணும் வாழ்க்கை
Labels:
Kanavu kaanum,
kanavu kanum,
இளையராஜா,
கனவு காணும்,
நீங்கள் கேட்டவை,
பாலுமகேந்திரா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment