Sunday, July 16, 2017

செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே


படம் : பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)

இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : ஸ்ரீனிவாஸ்

வரிகள் : பழனிபாரதி

பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்

செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே

சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டிக் கிடக்கிறது நம்மை அழைக்கிறது
பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்

வானகம் தூரம் இல்லை வங்கக்கடல் ஆழம் இல்லை

நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே
சூரியனை வட்டம் இட்டு தன்னை தானே சுற்றும் பூமி
நம்மைச் சுற்றி வருமே அந்த வானிலே
புது சந்தோஷம் எங்கே புது சங்கீதம் எங்கே
அது நம்பிக்கை வாழும் நெஞ்சில் தானடா

பூவெல்லாம் மாலைகள் ஆகும்

ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்

செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே

சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டிக் கிடக்கிறது நம்மை அழைக்கிறது
பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்

Wednesday, June 23, 2010

கனவு காணும் வாழ்க்கை

நான் அதிகம் பேசப்போவதில்லை பாலுமகேந்திரா, இளையராஜா, தாய் இறப்பு, சோகம் வேறொன்றுமில்லை.


படம்: நீங்கள் கேட்டவை
பாடியவர்: யேசுதாஸ்

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரமென்று கரையைத் தேடும் ஓடங்கள்


பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய்தானே
ஆசைகளென்ன? ஆணவம் என்ன?
உருவங்கள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பைதானே

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரமென்று கரையைத் தேடும் ஓடங்கள்


காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்?
பேதை மனிதனே!
கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்!

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரமென்று கரையைத் தேடும் ஓடங்கள்

Sunday, March 7, 2010

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ

பாரதி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களுமே சிறப்புக் கவனத்துடன் இசையமைக்கப்பட்ட பாடல்களென கூறலாம். எனக்கு திரு. ஜேசுதாஸ் அவர்களின் குரம் மிகவும் பிடிக்கும். அவருடைய குரலையொத்த திரு. மது பாலகிருஷ்ணனின் குரலும் பிடிப்பதில் ஆச்சர்யமில்லை. இந்த பாடலை அவர் இழைந்து பாடியிருப்பது எப்பொழுது கேட்டாலும் ஒருவித பரவச நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

வரிப்புலி அதள் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பென்னும் திமி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தரத்தகும் நெறி
வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் எனத்தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு தொண்டன்
பற்று தளைக்கு நெருப்பவன் ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக் கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன்

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

Wednesday, March 3, 2010

இசையில் தொடங்குதம்மா

திரு. இளையராஜா அவர்களை துறவி சன்னியாசி எனப் பலர் கூறுவதுண்டு. விரக தாபத்திற்கு அவர் எழுதிய வரிகளும் அமைத்த இசையும் அப்பப்பா.... கேட்டுப்பாருங்கள் இந்தப் பாடலை. நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில் வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில் வேறென்ன வேண்டும் சொல்ல?

படம்: ஹேராம். பாடியவர்:பண்டிட் அபய் சக்ரவர்த்தி.



இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
வசந்த கோலங்களை வானின் தேவதைகள்
கண்டு ரசிக்க வந்து கூடிவிட்டால்
இங்கு நமக்கு

இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே

தேய்ந்து வளரும் தேன் நிலாவே மண்ணில் வா
தேய்ந்திடாத தீபமாக ஒளிர வா
வானத்தில் மின்னிடும் வைரத்தின்
தாரகை தோரணங்கள் பூமிக்கு கொண்டுவா

இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே

நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே உயிர்களே உலகிலே இன்பத்தைத்
தேடி தேடி தேகத்தீ வளர்ந்ததே

இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே

நான்தானா இது நான்தானா

தற்செயலாய் தான் கேட்க நேரிட்டது இந்தப் பாடலை. ‘நினைத்தாலே’ என்னும் திரைப்படத்தில் திரு. விஜய் ஆண்டனி இசையமைப்பில் உருவான பாடல். திரும்ப திரும்ப கேட்கத் தூண்டிய பாடல். திரு.ராகுல் நம்பியாரும் திருமதி.சாதனா சர்கமும் கனிவாக பாடியிருக்கின்றனர். சாதனா சர்கம் குரல் மனதை வருடுகிறது. ‘பொன்’ என்பதற்கு ‘புண்’ என உச்சரிப்பதும் ’நூதனம்’ என்பதற்கு ‘நோதனம்’ என உச்சரிப்பதும் பாடலைத் தமிழ்ப்படுத்த எடுத்த முயற்சிகளில் ஏற்பட்ட வழுக்கல்கள். எல்லாப் புகழும் அந்த சொல்லமைப்பாளருக்கே போய்ச் சேரட்டும். பாடல் அருமை!


நான்தானா இது நான்தானா நினைக்கின்றேன் உனையே
நீ என்னைத் துறத்திடும் தீயென்பேன் அணைக்காதே எனையே

என் நினைவினில் மோதி எதிரொலித்தாயே
நிழலினில் நீயோ பிரதிபலித்தாயே
பாறையில் மோதிடும் நீரலை போல் எனைப் பெயர்த்தாயே
ஓ! கூரிய உன்விழியால் எனைத் தீண்டி பார்த்தாயே

நான்தானா இது நான்தானா நினைக்கின்றேன் உனையே

என்மேல் உந்தன் காதல் கொடுத்தாய்
புன்னகையால் என்னை இழுத்தாய்
ஊசிமுனை மீது ஒரு தவமிருந்தாய்
என்னுடைய ரோஜா செடியில்
உன்னுடைய வியர்வைத் துளிகள்
முட்கள் என்னைக் குத்துமென்று நீக்கிவிட்டாய்
என்னுடல் பாவனை உன்னதம் என்றாய்
என் குரல் ஓசை ஓர் சுவரம் என்றாய்
என்னுடன் வாழ்வது தீஞ்சுவை என்றாய் தேன் என்றாய்
பூவிழி பார்வைகள் நுண்ணியதென்றாய்
வாயிதழ் வார்த்தைகள் நூதனம் என்றாய்
நான் உனைச் சேர்ந்திடும் சீதனம் என்றாய் பொன் என்றாய்

பாறையில் மோதிடும் நீரலை போல் எனைப் பெயர்த்தாயே
ஓ! கூரிய உன்விழியால் எனைத் தீண்டி பார்த்தாயே

நான்தானா இது நான்தானா நினைக்கின்றேன் உனையே
நீ என்னைத் துறத்திடும் தீயென்பேன் அணைக்காதே எனையே

நீயும் எனைப் பாராதிருந்தால் நானும் உனைச் சேராதிருந்தால்
காதல் சுகம் காணாமலே இருந்திருப்பேன்
சந்தர்ப்பமோ நேராதிருந்தால் சம்மதமே கூறாதிருந்தால்
சாகும் வரை நோகும் தவம் புரிந்திருப்பேன்
உன்னுடல் வெய்யிலில் வியர்ப்பதைக் கூட
உன் நிழல் பூமியில் விழுவதைக் கூட
என் மனம் நிச்சயம் தாங்குவதில்லை வலிமையில்லை
பூவினைக் காட்டிலும் காதலன் மென்மை
ஏனதைப் போலென்னை மாற்றியது பெண்மை
காதலன் தேர்வுகள் தேடுது உன்னை அது இனிமை

பாறையில் மோதிடும் நீரலை போல் எனைப் பெயர்த்தாயே
ஓ! கூரிய உன்விழியால் எனைத் தீண்டி பார்த்தாயே

நான்தானா இது நான்தானா நினைக்கின்றேன் உனையே
நீ என்னைத் துறத்திடும் தீயென்பேன் அணைக்காதே எனையே

என் நினைவினில் மோதி எதிரொலித்தாயே
நிழலினில் நீயோ பிரதிபலித்தாயே
பாறையில் மோதிடும் நீரலை போல் எனைப் பெயர்த்தாயே
ஓ! கூரிய உன்விழியால் எனைத் தீண்டி பார்த்தாயே